டெல்லி: கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தியுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை மத்திய அமைச்சர் பிரகலாத்சிங் பாட்டீலிடம் கனிமொழி வழங்கினார். இந்திய வரலாற்றையே இனி தமிழர்கள் வரலாற்றில் இருந்து தான் முன்னோக்கி பார்க்க வேண்டும் என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.