×

திருவண்ணாமலை அருகே ஆம்புலன்சில் இளம்பெண்ணுக்கு சுகப்பிரசவம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே ஆம்புலன்சில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கிளையூர் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம்(36), கூலித்தொழிலாளி. இவரது மனைவி சக்தி(30). இவர்களுக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சக்தி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

நேற்று காலை அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால், சக்தியை அவரது உறவினர்கள் செங்கம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்றனர். ஆம்புலன்சில் டிரைவர் பரஞ்சோதியும், மருத்துவ பணியாளர் ஷேக்ஸ்பியரும் பணியில் இருந்தனர். இந்நிலையில், செங்கம் அருகே வந்து கொண்டிருந்தபோது சக்திக்கு பிரசவ வலி அதிகரித்து, ஆம்புலன்சிலேயே சுகப்பிரசவம் நடந்தது. இதில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, தாயும், சேயும் சிகிச்சைக்காக செங்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இருவரும் நலமாக உள்ளனர்.

Tags : childbirth ,Thiruvannamalai Thiruvannamalai , Thiruvannamalai, childbirth
× RELATED கார் கண்ணாடி உடைத்து லேப்டாப்,...