சென்னை: விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்கப்படும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பாடுபடும் என்றும் தெரிவித்தார்.