நெல்லை: நெல்லையில் காவலர்களைத் தாக்கிய ஆதி திராவிட நலத்துறை அமைச்சரின் கணவர் முருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக கைது செய்யப்பட்டவர்களை அழைத்துச் செல்ல வந்த போது காவலர்களுடன் மோதல் ஏற்பட்டுள்ளது. காவலர்கள் மகேஷ், மகேந்திரன், செந்தில் ஆகியோரைத் தாக்கியதாக முருகன், மெத்துசலா, முப்பிடாதி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.