×

வெளிநாடுகளில் உள்ளது போல மாணவர்களுக்கு படிப்புடன் தொழில் பயிற்சி: கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

சென்னை: தமிழக மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ளதுபோல படிப்புடன் தொழிற்பயிற்சியும் பெறவேண்டும் என்று கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். சென்னை விமான நிலையத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:வெளிநாடுகளில் இருப்பதைப்போல், நம் நாட்டிலும் மாணவர்களை விடுமுறை நாட்களில் அருகில் இருக்கும் தொழிற்சாலைகள், மிகப்பெரிய தொழில் நிறுவனங்களுக்கு அழைத்துச்சென்று, அவர்களுக்கு தொழில்களில் முறையான பயிற்சி  அளிக்க முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இதுபற்றி தமிழக முதல்வர் முழுமையாக ஆலோசித்து முடிவு செய்தவுடன், தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதனால் நமது  மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். அவர்கள் படிப்பை முடித்ததும் ஏதோவொரு தொழிற்சாலையில் வேலைக்கு செல்ல வசதியாக இருக்கும்.மேலும், தமிழகம் சார்பில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களுக்கு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள செல்லும் வீரர், வீராங்கனைகள் வெற்றிபெற்று சாதனையாளராக திரும்பினால், அவர்களுக்கு தமிழக அரசு ஆக்கமும் ஊக்கமும்  தருவதற்கு தயாராக உள்ளது.


Tags : KA Sengottaiyan , overseas, Career, training ,KA Sengottaiyan
× RELATED போளூரில் அதிமுக பொதுக்கூட்டம்...