×

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனுக்களை அளிக்க இன்று கடைசி: மு.க.ஸ்டாலின் நாளை நேர்காணல் நடத்துகிறார்

சென்னை: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனுக்களை அளிக்க இன்று கடைசி நாள் ஆகும். விருப்ப மனுக்கள் அளித்தவர்களிடம் மு.க.ஸ்டாலின் நாளை நேர்காணல் நடத்துகிறார்.தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21ம் தேதி நடைபெறுகிறது. இதில்  விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும். நாங்குநேரி தொகுதியில் திமுக  கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.இதைத் தொடர்ந்து திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட விரும்புகிறவர்கள் 22ம் தேதி(நேற்று) முதல் விருப்பமனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட  விருப்பம் தெரிவித்து ஏராளமானோர் சென்னை அண்ணா அறிவாலயம் வந்து விருப்ப மனுக்களை வாங்கி சென்றனர். அவர்கள் இன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் விருப்ப மனுவை அளிக்க வேண்டும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், போட்டியிட விருப்ப மனுக்களை வாங்கி சென்றவர்கள் இன்று மனுக்களை அளிப்பார்கள்.

தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனுக்களை அளித்தவர்களிடம் நாளை(24ம் தேதி) காலை 10 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நேர்காணல்  நடைபெறுகிறது. விருப்ப மனு அளித்தவர்களிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்துவார். தொடர்ந்து அன்று மாலை திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அதிகாரப்பூர்வமாக  அறிவிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதியில் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரத்தில் ஈடுபட  திட்டமிட்டுள்ளார். இதற்கான தேர்தல் பிரசார வியூகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.

Tags : MK Stalin , By-election ,batch, by-election, MK Stalin
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...