×

3 மண்டலங்களில் துப்புரவு பணி தனியாருக்கு வழங்கிய ஒப்பந்தம் மேலும் 6 மாதங்கள் நீட்டிப்பு: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னையில் 3 மண்டல துப்புரவு பணிகள் தனியாருக்கு அளிக்கப்பட்ட ஒப்பந்தம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு செய்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சென்னை மாநகராட்சியில் மொத்தம் 15 மண்டலங்கள் உள்ளன. இந்த மண்டலங்களில் தினசரி 5000 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இந்நிலையில் துப்புரவு பணிகளை தனியாரிடம் கொடுக்க மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி அடையாறு, தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் உள்ளிட்ட மூன்று மண்டல துப்புரவு பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அளிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து இந்த ஒப்பந்தத்தை மேலும் 6 மாத காலம் நீட்டித்து மாநகராட்சி உத்தரவிட்டது. இதன்பிறகு 1, 2, 3, 11, 12, 14, 15 ஆகிய எட்டு மண்டலங்களுக்கான துப்புரவு பணியை தனியாருக்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டது. இதனுடன் சேர்ந்து 9, 10, 13 ஆகிய மூன்று மண்டலங்களுக்கான துப்புரவு பணிகளை மீண்டும் தனியாருக்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 11 மண்டலங்களுக்கான துப்புரவு பணிகளை தனியாருக்கு அளிக்க டெண்டர் கோரப்பட்டது.

துப்புரவு பணிகளை தனியாருக்கு கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதையும் மீறி துப்புரவு பணிகளை தனியாருக்கு கொடுப்பதற்கான வேலைகளை மாநகராட்சி செய்து வந்தது. இந்த டெண்டரை இறுதி செய்யும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. இன்னும் மூன்று அல்லது நான்கு வாரங்களில் இந்த டெண்டர்  இறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் 9, 10, 13 ஆகிய மண்டலங்களில் நீட்டிப்பு செய்யப்பட்ட ஒப்பந்தம் செப்டம்பர் மாதத்துடன் முடிவுறுகிறது. இந்நிலையில் அந்த ஒப்பந்தத்தை ேமலும் 6 மாதகாலம் நீட்டித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த தனியார் நிறுவனம் தொழிலாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், சென்னை மாநகராட்சியுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை   நேற்று முதல் (செப்.22ம் ேததி) மேலும் 6 மாதகாலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சியிடம் இருந்து உத்தரவு பெறப்பட்டுள்ளது. ஆகவே அனைத்து தொழிலாளர்களும் ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்ட காலத்தில் கடமை உணர்ச்சியுடன் தங்களுடைய பணிகளை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : zones ,Corporation , Extension , Cleanliness Agreement , 3 Zones, Extra 6 months,Corporation Officials
× RELATED சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற...