சென்னை: சென்னை சோளிங்கநல்லூரில் இருந்து அக்கரைக்கு சென்ற எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர்களின் கார் பக்கிங்ஹாம் கால்வாயில் பாய்ந்தது. வினு, அஜய் உள்ளிட்ட மாணவர்கள் காரில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் கால்வாயில் விழுந்து மூழ்கியது. பிற வாகனங்கள் மீது மோதுவதைத் தவிர்க்க காரைத் திருப்பிய போது கட்டுப்பாட்டை இழந்த கார், கால்வாய்க்குள் பாய்ந்ததாக கூறப்படுகிறது.