மும்பை: நங்கநல்லூரில் 120 சவரன் நகை கொள்ளை போன வழக்கில் பவாரியா கொள்ளையர்களை மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸ் கைது செய்துள்ளது. மேலும் கொள்ளையர்களை தமிழகம் கொண்டுவர தாம்பரம் தனிப்படை போலீஸ் மத்திய பிரதேசத்திற்கு விரைந்ததாக முன்னாள் டி.ஜி.பி. ஜாங்கிட் பேட்டியளித்துள்ளார்.