×

மகாராஷ்டிரா முதல்வராக தாம் மீண்டும் பதவியேற்பேன்: தேவேந்திர பட்னாவிஸ் நம்பிக்கை

மும்பை: மகாராஷ்டிரா முதல்வராக தாம் மீண்டும் பதவியேற்பேன் என அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசின் பதவிக் காலம் விரைவில் நிறைவடையவுள்ளது. இதையொட்டி, அம்மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 21-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது.

இதற்காக தேசியவாத காங்கிரஸுடன் அக்கட்சி கூட்டணி அமைத்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதேசமயத்தில், மாநிலத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் பாஜகவும் தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதற்காக சிவசேனாவுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. இருந்த போதிலும் இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிப்பதால் கூட்டணி அமைவதில் சிக்கில் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், மும்பையில் ஓர் ஆங்கிலப் பத்திரிகை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று கலந்துகொண்டார். அப்போது அவரிடம் இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். சட்டப்பேரவைத் தேர்தலில் சிவ சேனாவுடன் கூட்டணி அமைத்து தான் பாஜக போட்டியிடும். எனவே இரு கட்சிகளுக்கு இடையே தொகுதிப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் அது இறுதி செய்யப்படும். இந்த தேர்தலிலும் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். எனவே  முதல்வராக நான் மீண்டும் பதவியேற்பேன் என கூறியுள்ளார்.

Tags : Devendra Patnavis ,CM ,Maharashtra , Maharashtra Chief Minister, again, swearing in, Devendra Patnavis, hope
× RELATED கடந்த 10 ஆண்டுகாலமாக மாநில உரிமைகளை...