மாஸ்கோ: உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அமித் பாங்கல் வசப்படுத்தி உள்ளார்.ரஷ்யாவின் எகடரின்பர்க் நகரில் நடந்த இந்த தொடரின் ஆண்கள் 52 கிலோ எடை பிரிவு பைனலில், நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் ஷாகோபிதின் ஸாய்ரோவை (உஸ்பெகிஸ்தான்) நேற்று எதிர்கொண்ட அமித் பாங்கல் 0-5 என்ற புள்ளிக் கணக்கில் போராடித் தோற்று 2வது இடம் பிடித்தார். எனினும், உலக பாக்சிங்கில் வெள்ளி வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. மேலும் இந்த தொடரில் இந்தியா முதல் முறையாக 2 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆண்கள் 63 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் மணிஷ் கவுஷிக் வெண்கலப் பதக்கம் பெற்றார்.