×

சுபஸ்ரீ மரணத்துக்கு காரணமான குற்றவாளியை கைது செய்யாமல் காப்பாற்றி வருவது சட்ட விரோதம்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை : சுபஸ்ரீ மரணத்துக்கு காரணமான குற்றவாளியைக் கைது செய்யாமல் காப்பாற்றி வருவது சட்ட விரோதம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக பிரமுகர் ஜெயகோபால் இல்லத் திருமண நிகழ்ச்சிக்காக முதல்வர் மற்றும் துணை முதல்வரை வரவேற்று வைத்திருந்த பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதற்கு காரணமாக அதிமுக பிரமுகர் ஜெயகோபால் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில் சுபஸ்ரீ உயிரிழந்து 9 ம் நாளான நேற்று திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு:சுபயின் உயிர் பறிக்கப்பட்டு இத்தனை நாளாகியும், குற்றவாளியைக் கைது செய்யாமல் காப்பாற்றி வருவது சட்ட விரோதம். காவல் நிலைய பாத்ரூமில் பலரும் வழுக்கி விழுந்து மாவுக்கட்டு போடும் நிலையில், ஆளுங்கட்சிப் பிரமுகர் மீது தூசு கூடப்படாமல் சென்னை போலீஸ் காப்பாற்றுவது யாருக்காக. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : death ,Subhashree , Subhashree's, death prevents, from being,arrested
× RELATED மாஸ்கோவில் நடைபெற்ற இசை...