×

இடைத் தேர்தல் அறிவிப்பு காரணமாக திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு: க.அன்பழகன் அறிவிப்பு

சென்னை : திமுக பொதுக் குழு கூட்டம் வரும் 6ம் தேதி சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதனைத் தொடர்ந்து பொதுக் குழு கூட்டம் ஒத்தி வைக்கப்படுதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை: விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், 6-10-2019 ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெறவிருந்த திமுகபொதுக்குழுக் கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது. பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : meeting ,DMK ,K Announcement ,announcement ,K Announcement DMK , DMK general ,postponed , mid-term announcement,K Announcement
× RELATED கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்