சேலம்: மேட்டூர் அணை ஜலகண்டேஸ்வரர் கோயில் மூல லிங்கம் குறித்து இந்து சமய அறநிலையத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள பாலவாடி கிராம மக்களிடம் அறநிலையத்துறையினர் விசாரணை நடத்துகின்றனர். நித்யானந்தாவிடம் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயில் லிங்கத்தை மீட்டுத்தரக்கோரி கிராம மக்கள் ஏற்கனவே புகார் அளித்துள்ளனர். ஜலகண்டேஸ்வரர் கோயில் லிங்கம் தன்னிடம் இருப்பதாக நித்யானந்தாவே கூறிய வீடியோ வெளியானதால் புகார் அளிக்கப்பட்டுள்ளது.