×

நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி அருகே லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து: 2 வயது குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி அருகே உள்ள வரகூரில் சாலையில் சென்று கொண்டிருந்த லாரி மீது எதிரே வந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில், காரில் பயணித்த 2 வயது குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வரக்கூர் பரமத்தி சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரில் 6 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது. இந்த கார் ஓட்டுநர் தனக்கு முன்பு சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்த முயன்ற பொது, எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியது. இந்த பயங்கர விபத்தில் காரில் பயணித்த ஓட்டுநர் ராஜேந்திரன் மற்றும் ஒரே குடும்பத்தை சேர்ந்த சரவணன், கேசவன், ராஜ், 2 வயது ஆண் குழந்தை பிரிஜின், கந்தம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் வசந்தி என்பவர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது நாமக்கல் தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர்கள் அனைவரும் பரமத்தி வேலூரை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் இந்த விபத்து குறித்து காவல்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த விபத்திற்கு முக்கிய காரணம் ஓட்டுநர் ராஜேந்திரன் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. முன் சென்ற வாகனத்தை முந்த முயற்சி செய்ததே இந்த கோர விபத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், முழு விசாரணை முடிந்த பிறகே விபத்திற்கான கரணங்கள் குறித்து தெரிய வரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Car crashes ,Erumapatti ,Namakkal ,Namakkal district , Namakkal, truck, car, accident, death
× RELATED சந்தைக்குள் புகுந்து மின் ஒயர்கள் திருட்டு