சென்னை : பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தலைமை செயலாளர் சண்முகம், தமிழக டிஜிபி திரிபாதியும் மாமல்லபுரத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.அக்டோபர் 11, 12, 13 ஆகிய நாட்களில் இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேசுகின்றனர்.