திருவனந்தபுரம்: கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகே சேந்தமங்கலம் பகுதியை சேரந்தவர் ஜார்ஜ் (68). அந்த பகுதியில் உள்ள கோவிலகம் புனித சிலுவை சர்ச்சில் பாதிரியாராக உள்ளார். கடந்த மாதம் அந்த பகுதியை சேர்ந்த 3 சிறுமிகள் சர்ச்சில் பிரார்த்தனைக்காக சென்றுள்ளனர். 9 வயதான அந்த சிறுமிகளை ஆசை வார்த்தைகூறி, பாதிரியார் தனது அறைக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் ஒரு சிறுமி மட்டும் கடந்த 2 தினங்களுக்கு முன்பு, பள்ளி ஆசிரியையிடம் கூறி உள்ளார். அதிர்ச்சி அடைந்த ஆசிரியை. சிறுமியின் பெற்றோர், எர்ணாகுளம் குழந்தைகள் நல அமைப்பு ஆகியோரிடம் தெரிவித்தார்.
இது தொடர்பாக வடக்கேகரை காவல் நிலையத்திலும் புகார் செய்யப்பட்டது. விசாரணையில் 3 சிறுமிகளையும் பாதிரியார் ஜார்ஜ் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து. போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை அறிந்த பாதிரியார் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.