×

கோவை கோர்ட்டில் சிபிஐ அறிக்கை விஷ்ணுபிரியா தற்கொலைக்கு யாரும் தூண்டுதல் கிடையாது

கோவை: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்தவர் விஷ்ணுபிரியா. இவர் 2015ம் ஆண்டு செப்டம்பர் 18ல் அவரது முகாம் அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்தது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து குற்றவாளிகள் யாரும் இல்லை.  வழக்கை கைவிடுவதாக கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதற்கு விஷ்ணுபிரியா தந்தை ரவி எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் விசாரிக்கக்கோரி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம், சிபிஐ அறிக்கையில் உள்ள சிலவற்றை சுட்டிக்காட்டி, 6 மாதத்தில் விசாரணை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

 இந்நிலையில், விசாரணை முடித்து 2வது அறிக்கையை சிபிஐ கடந்த 28ம் தேதி தாக்கல் செய்துள்ளது. அதில், டி.எஸ்.பி.விஷ்ணுபிரியா தற்கொலைக்கு யாருடைய தூண்டுதலும் இல்லை. வழக்கை முடித்து வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிபிஐயின் 2வது அறிக்கைக்கு பதில் அளிக்க ஆஜராகும்படி, நீதிமன்றத்தில் இருந்து விஷ்ணுபிரியா தந்தைக்கு கடந்த 4ம் தேதி சம்மன் அனுப்பியது. அதன்படி, நேற்று கோவை நீதிமன்றத்தில் ஆஜராக டி.எஸ்.பி.விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி வந்த நிலையில், நீதிபதி இல்லாததால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Tags : suicide ,court ,Vishnupriya ,Goa ,CBI ,no one , Goa Court, CBI Report, Vishnupriya, Suicide
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...