×

திருமணமான 1 வாரத்தில் கணவரை சிறைக்கு அனுப்பிய காதல் மனைவி: ஜாதியை சொல்லி திட்டியதாக புகார் கொடுத்ததால் நடவடிக்கை

சேலம்: சேலத்தில் பட்டதாரி பெண்ணை காதலித்து திருமணம் செய்த ஒரே வாரத்தில் ஜாதியை சொல்லி அடித்து விரட்டிய புதுமாப்பிள்ளையை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் அழகாபுரம் மோளப்பட்டியான்வட்டத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் சுரேஷ்குமார்(25). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. சூரமங்கலம் சின்னப்பாநகரை சேர்ந்தவர் சோபியா(24). பி.காம் பட்டதாரி. சுரேஷ்குமாரும், சோபியாவும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், சுரேஷ்குமார் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு ெதரிவிக்கப்பட்டது. எனினும் கடந்த 12ம்தேதி, வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கினர்.

இந்நிலையில் புதுப்பெண் சோபியா, நேற்று முன்தினம் திடீரென சேலம் சூரமங்கலம் மகளிர் போலீஸ் ஸ்டேசனில் கணவர் மீது புகார் கொடுத்தார். அதில், ‘‘சுரேஷ்குமாரும், நானும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். தனியாக வீடு வாடகைக்கு எடுத்து  தங்கிய நிலையில், திடீரென எனது கணவர், என்னை ஜாதியை சொல்லி திட்டி, வீட்டைவிட்டு வெளியே அனுப்பி விட்டார். எனவே, சுரேஷ்குமார் அவரது ெபற்றோர் ஏழுமலை, மகாலட்சுமி மற்றும் திருநாவுக்கரசு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என கூறியிருந்தார். இதையடுத்து சுரேஷ்குமார் உள்பட 4 பேர் மீது மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இவர்களில் சுரேஷ்குமாரை கைது  செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஜாதியை சொல்லி திட்டியதால் திருமணமான ஒரே வாரத்தில் கணவரை மனைவி  சிறைக்கு அனுப்பியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : nation ,jail ,prison ,Love , Husband, prison, romantic wife, caste
× RELATED சேலம் சிறையில் டிஐஜி ஆய்வு