சென்னை: மலேசியாவில் செப்.28ல் நடைபெறவுள்ள சின்னத்திரை நட்சத்திர கலை விழாவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். சின்னத்திரை நட்சத்திர விழாவில் நான் பங்கேற்க விரும்பிய போதிலும் அலுவல் காரணமாக பங்கேற்க இயலவில்லை. சின்னத்திரை சங்கத்தின் வளர்ச்சிக்காகவும், உறுப்பினர்களின் குடும்ப நலனுக்காகவும் கலை நிகழ்ச்சி நடப்பது பாராட்டுக்குரியது என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.