பழனி: பழனியில் சித்தநாதன் பஞ்சாமிர்த கடை உரிமையாளர் அசோக்குமார் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அசோக்குமார் வீட்டில் 10 பேர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் குழு சோதனை நடத்தி வருகிறது. சித்தநாதன் பஞ்சாமிர்த கடையில் ஏற்கனவே 10 நாட்களுக்கு முன்பு நடந்த சோதனையில் ரூ.93 கோடி வரி ஏய்ப்பு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.