சென்னை: கோவை மாவட்டத்தில் யானை வழித்தடங்களை மீட்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முரளிதரன் என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், செங்கல் சூளைகளால் யானை வழித்தடம் தடைபட்டுள்ளதாக புகார் தெரிவித்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஷேஷசாயி அமர்வு முதன்மை வனப்பாதுகவலர் பதில் தர உத்தரவு பிறப்பித்துள்ளது.