×

குற்றாலத்தில் இதமான சூழல்: அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்

தென்காசி: குற்றாலத்தில் இரண்டு தினங்களாக சாரல் குறிப்பிடத்தக்க அளவில் இல்லாத நிலையிலும் அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுகிறது. குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் ஜூன், ஜூலை மாதங்களில் சுமாராக இருந்த நிலையில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் அருவிகளில் தொடர்ந்து தண்ணீர் நன்றாக விழும் அளவிற்கு உள்ளது.  தற்போது சீசன் காலம் நிறைவடைந்த நிலையிலும் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது.  கடந்த இரண்டு தினங்களாக குறிப்பிடத்தக்க அளவில் சாரல் இல்லை.
 
இன்று காலை லேசான வெயில் காணப்பட்டது. இதமான காற்று வீசியது. மேகமூட்டம் இல்லை. சாரல் இல்லாத நிலையிலும் மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் நன்றாக உள்ளது. ஐந்தருவியில் நான்கு பிரிவுகளில் தண்ணீர்  விழுகிறது.  பழைய குற்றால அருவி,  புலியருவி ஆகியவற்றிலும் தண்ணீர் ஓரளவு கொட்டுகிறது. அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுந்த போதும் சீசன் காலம் நிறைவடைந்ததால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக உள்ளது.

Tags : Courtallam , Courtallam, pleasant environment, waterfall, water
× RELATED குற்றாலத்தில் ஒரு வாரமாக...