×

திருமங்கலம் அருகே நாய்கள் கடித்து மான் சாவு

திருமங்கலம்: திருமங்கலம் அருகே நாய்கள் கடித்து குதறியதில் மான் இறந்தது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்துள்ள கள்ளிக்குடி, சிவரக்கோட்டை கண்மாய் மற்றும் காட்டு பகுதியில் மான்கள் வசித்து வருகின்றன. இவைகள் இரை, தண்ணீர் தேடி ஊருக்குள் வரும் போது வாகனத்தில் அடிபட்டும், நாய்கள் கடித்து இறப்பதும் தொடர்கதையாக உள்ளது.

திருமங்கலம் அடுத்துள்ள சிவரக்கோட்டை கமலண்ட ஆற்றின் கரையோரத்தில் இன்று அதிகாலை 6 மணியளவில் இரண்டு வயது ஆண் மான் இறந்து கிடந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் உசிலம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் விசாரணை செய்ததில், தண்ணீர் தேடி வந்த போது நாய்கள் கடித்ததில் மான் இறந்தது தெரியவந்தது. உடற்கூறு பரிசோதனைக்கு பின் மான் புதைக்கப்பட்டது.

Tags : Thirumangalam Thirumangalam , Thirumangalam, dogs, deer, death
× RELATED திருமங்கலத்தில் கானல் நீராகி வரும்...