×

திருவேற்காடு அருகே பள்ளி நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள வந்த அமைச்சர்களுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

திருவேற்காடு: திருவேற்காடு அருகே பள்ளி நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள வந்த அமைச்சர்கள் பாண்டியராஜன் மற்றும் ராஜலட்சுமிக்கு பொதுமக்கள் எதிர்த்து தெரிவித்து  கருப்புக்கொடி காட்டியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. சென்னை திருவேற்காடு அருகே அயனம்பாக்கத்தில் இருக்கக்கூடிய அரசு மேல்நிலைபள்ளி வளாகத்தில் ஆதி திராவிடர் விடுதி ஒன்றை கட்டுவதற்காக அமைச்சர்  மாஃபா பாண்டியராஜன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி மற்றும் பெஞ்சமின் ஆகியோர் கலந்துக்கொள்வதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

ஆனால் அந்த மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கட்டிடம் கட்டித் தருவதற்கு பலவகையில் கோரிக்கை வைத்தும் அந்த கோரிக்கைகளை ஏற்காமல் திடீரென இந்த பகுதியில்  விடுதி கட்ட அடிக்கல் நாட்ட அமைச்சர்கள் வந்திருப்பதை அறிந்த இந்த பகுதி மக்களும் , பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரும் சேர்ந்து அமைச்சர்களுக்கு கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதுகுறித்து பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் நிர்வாகி கூறியதாவது : ஊர் கிராம மக்கள் அனைவருடைய முயற்சியால் உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக மாற்றப்பட்டது. இதில் கட்டிடம் கட்டித்தருமாறு பலவகை கோரிக்கைகளை அவர்கள் ஏற்கவில்லை என்று கூறினார்.


Tags : protest ,school event ,ministers ,Thiruverkadu Thiruvenkadu ,attendees , Thiruvenkadu, school event, attend, ministers, public, protest
× RELATED 6 வழிச்சாலை பணிக்கு எதிர்ப்பு...