சென்னை: தனியார் கட்டடங்கள் மற்றும் வீடுகளில் வசிப்போர் தங்கள் கட்டடத்தின் உறுதித்தன்மை குறித்து அறிய விரும்பினால், மாநகராட்சி உதவி செய்யும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டியளித்துள்ளார். மேலும் மழைநீர் தேங்க கூடிய இடங்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது எனவும் கூறினார். முதலில் 1500 இடங்கள் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது 200 இடங்களில் மட்டுமே மழைநீர் தேங்கும் நிலை உள்ளது என கூறினார். மழைநீரை அப்புறப்படுத்துவதற்கு 500 மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளன என தெரிவித்தார். இதுவரை 18 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன, அவை அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டன என தெரிவித்தார்.