தாம்பரம்: தாம்பரம், சானடோரியத்தில் உள்ள அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் காலை எம்டிசி டிக்கெட் பரிசோதகர்கள்சோதனை செய்த போது ஒரு பள்ளி மாணவன் கொடுத்த பாஸ் போலியானது என தெரியவந்தது. விசாரணையில் புது பெருங்களத்தூர் நெட் சென்டரில் தயாரித்து ₹60 ரூபாய்க்கு விற்றது தெரிந்தது. புகாரின் பேரில் தாம்பரம் ேபாலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று காலை நெட் சென்டர் உரிமையாளர் கௌதம் (24) என்பவரை கைது செய்தனர்.