×

கம்பெனிக்குள் புகுந்து திருடிய சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது

புழல்: செங்குன்றம் எல்லாளம்மன் பேட்டை கிராமத்தில் தனியார் சிமென்ட் கற்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் கடந்த 12ம் தேதி இரவு பணியை முடித்துவிட்டு ஊழியர்கள் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது மர்ம கும்பல் நிறுவனத்தில் புகுந்து 7 செல்போன், ₹20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.இதுகுறித்து நிறுவன உரிமையாளர் ஆசித் அகமது (62) செங்குன்றம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சோலையம்மன் நகரை சேர்ந்த கர்ணா (19), இந்திராநகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், ஆட்டங்காதாங்கள் சுந்தர் (19), அம்பேத்கர் நகர் சேர்ந்த சந்திர சேகர் (19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர். அவர்களிடம் இருந்து 7 செல்போன் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.



Tags : persons ,children ,company , steal, Five arrested, ,children
× RELATED செங்கல்பட்டு புறவழிசாலையில் கார் மீது லாரி மோதி விபத்து