×

சீசன் நிறைவடைந்த நிலையிலும் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு

தென்காசி: குற்றாலத்தில் நேற்று சுள்ளென வெயில் அடித்த நிலையில் இன்று காலை இதமான சூழல் நிலவுகிறது. அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுந்தபோதும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைவாகவே உள்ளது. குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் துவக்கத்தில் சற்று ஏமாற்றினாலும் தற்போது சீசன் காலம் நிறைவடைந்த பிறகும் சாரல் நன்றாக பெய்வதுடன் அருவிகளில் தண்ணீரும் நன்றாக விழுகிறது. நேற்று திடீர் மாற்றமாக சுள்ளென்று வெயில் அடித்த நிலையில் இன்று காலை இதமான சூழல், லேசான மேகமூட்டம் மெல்லிய சாரல் காணப்பட்டது.

அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுகிறது. மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் பரந்து விழுகிறது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. பழைய குற்றால அருவி, புலியருவி ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. சீசன் நிறைவடைந்து விட்ட நிலையில் அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுந்த போதும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைவாகவே உள்ளது.


Tags : waterfalls ,season ,Courtallam , Season, Courtallam Falls, Water Show
× RELATED கோக் ஸ்டுடியோ தமிழ் சீசன் 2-ன் புதிய பாடல் “தமிழ் வாழ்த்து” வெளியீடு