டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்தாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. டெல்லியில் உள்ள மோடியின் இல்லத்தில் அவரை சந்தித்த மம்தா பானர்ஜி, பிரதமர் மோடிக்கு குர்தா ஒன்றை பரிசாக வழங்கினார். இதனையடுத்து மேற்கு வங்கத்துக்கான மத்திய நிதி ஒதுக்கீடு, தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவை பற்றி மோடியுடன் ஆலோசிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.