சென்னை: சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் 20 பேர் கத்தியுடன் மோதிக்கொண்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. 20 பேரும் ஒருவருக்கு ஒருவர் கத்தியுடன் மோதிக்கொண்டதால் ரயில் நிலையத்தில் பதற்றம் ஏற்பட்டது. பின்பு ரயில்வே பாதுகாப்பு படையினரைக் கண்டதும் சுவர் ஏறி குதித்து தப்பியோட முயற்சித்ததாக தகவல்.