சென்னை: சென்னை குரோம்பேட்டையில் உள்ள சுபஸ்ரீ-ன் வீட்டிற்கு சென்று திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்திப்பில், சுபஸ்ரீக்கு நிகழ்ந்தது போல் வேறு யாருக்கும் நடந்து விட கூடாது என உதயநிதி ஸ்டாலின் கூறினார். பேனர் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக நிகழ்ச்சிகளில் பேனர், கட்அவுட் வைக்கப்படாது என உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்தார்.