×

வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார் ராஜஸ்தான் முதல்வர்

ஜெய்ப்பூர்:  ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் பார்வையிட்டார். ராஜஸ்தான் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை முதல்வர் அசோக் கெலாட் நேற்று ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். கோடா, ஜலாவார் மற்றும் டோல்பூர் மாவட்டங்களை முதல்வர் பார்வையிட்டார். பேரிடர் மேலாண்மை மற்றும் நிவாரண துறை அமைச்சர் பன்வார் லால் மேக்வால் , நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் சாந்தி தாரிவால் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Tags : CM ,Rajasthan ,areas , Flood, Rajasthan CM
× RELATED 2024 ஐபிஎல் டி20: டெல்லி அணிக்கு எதிரான...