×

கொலை குற்றவாளிகள் 2 பேருக்கு குண்டாஸ்

புழல்: சோழவரம் ஒன்றியம் நல்லூர் ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவராகவும் அதிமுக ஊராட்சி செயலாளராக இருந்தவர் கோட்டைச்சாமி (52). இவர், கடந்த 2016 ம் ஆண்டு செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம் புழல் ஏரி பகுதியில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட  பெருமாள் அடிபாதம், 12வது தெருவை சேர்ந்த விநாயகம் (45) என்பவரை செங்குன்றம் போலீசார் முக்கிய குற்றவாளியாக கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வந்த விநாயகம், பல வழக்குகளில் மீண்டும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் நல்லூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர், அதிமுகவில் முக்கிய பிரமுகராக இருந்து வந்தார்.

இதேபோல், பம்மதுகுளம் பகுதியைச் சேர்ந்த வேழவேந்தன் (22) இவர், மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பாக புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இவர்கள் வெளியில் வந்தால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்ற அடிப்படையில் சென்னை மாநகர கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் செங்குன்றம் போலீசார் இருவரையும் குண்டர்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

Tags : murder , Gundas , 2 murder, convicts
× RELATED ஈக்வடார் நாட்டின் மேயர் பிரிஜிட்...