×

தமிழ், ஆங்கிலம் மொழித்தாள்கள் குறைப்பு 10ம் வகுப்பு தேர்வு அட்டவணையில் மாற்றம்: தேர்வுத்துறை அறிவிப்பு

சென்னை: ஆங்கிலம், தமிழ் மொழிப்பாடத் தாள்கள் ஒன்றாக குறைக்கப்பட்டதை அடுத்து, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான புதிய தேர்வு அட்டவணையை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியும் முன்கூட்டியே அரசு வெளியிட்டது. இந்நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வில் இதுவரை இருந்த  மொழிப்பாடங்களில் தலா 2 தாள்கள் என்ற நடைமுறையை மாற்றி இந்த கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு முதல் மொழித்தாள்களில் தலா ஒரு தாள் தான் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணையில்  மாற்றம் செய்து தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

மாணவர்கள் மன அழுத்தத்தை குறைக்கும் வகையிலும், ஆசிரியர்களை அதிக அளவில் கற்பித்தல், கல்வி மேம்பாட்டு பணியில் அதிக நேரம் ஈடுபடுத்தும் வகையிலும் இந்த கல்வி ஆண்டு  முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மொழிப் பாடம் மற்றும் ஆங்கிலப் பாடத்துக்கான இரண்டு தாள்களாக தேர்வு எழுதும் நடைமுறையை ஒருங்கிணைத்து ஒரே தாளாக தேர்வு நடத்தும் வகையில் திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை  வெளியிடப்படுகிறது. இதன்படி பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 27ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13ம் தேதி வரை நடக்கும். மார்ச் 27ம் தேதி மொழிப்பாடம்(தமிழ்), 31ம் தேதி ஆங்கிலம் மொழிப்பாடத் தேர்வுகள் நடக்கிறது. இதற்கான தேர்வு முடிவுகள்  மே 4ம் தேதி வெளியாகும்.

Tags : SELECTION ,10th Class Examination CHANGE , Tamil ,English , 10th Class, Examination,SELECTION
× RELATED பட்டதாரி ஆசிரியர் பணி ஜூனில் தேர்வு...