×

புரட்டாசி சனிக்கிழமையையொட்டி திருவண்ணாமலை கோயிலில் 30 நவீன கேமராக்கள் பொருத்தம்: குற்றங்களை தடுக்க நடவடிக்கை

திருவில்லிபுத்தூர்: புரட்டாசி சனிக்கிழமையையொட்டி திருவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் 30 நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே உள்ளது திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயில். ஏழைகளின் திருப்பதி எனவும், தென் திருப்பதி எனவும் அழைக்கப்படும் இக்கோயிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் கூட்டம் அலைமோதும். விருதுநகர், திருநெல்வேலி, மதுரை மாவட்டம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர்.

இந்த ஆண்டு புரட்டாசி முதல் சனிக்கிழமை 21ம் தேதி வருகிறது. இதற்காக கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கூட்ட நெரிசலை பயன்படுத்தி சிலர், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதை கண்காணிக்க கோயிலில் 30 இடங்களில் நவீன கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து ஆண்டாள் கோயிலை சேர்ந்த ஒருவரிடம் கேட்டபோது, ‘ஒன்றரை லட்சம் ரூபாய் செல்வில் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. கோயில் பாதுகாப்பிற்கும், கோயிலுக்கு வரும் கூட்டத்தை பயன்படுத்தி சமூக விரோத செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளை கண்காணிக்கவும் கேமராக்கள் நிரந்தரமாக இயங்கும். இந்த கேமராக்களில் பதிவான காட்சிகளை  மானிட்டர் மூலம் போலீசார் கண்காணிப்பார்கள்’ என்றார். ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags : Tiruvannamalai temple , Pattasi, Thiruvannamalai, Modern Cameras
× RELATED சென்னை பக்தர் மாரடைப்பால் சாவு அண்ணாமலையார் கோயிலுக்கு வந்த