×

பொருளாதார சரிவை கண்டுள்ள இந்தியாவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்: குடும்பத்தார் மூலம் ப.சிதம்பரம் ட்விட்

டெல்லி: பொருளாதார சரிவை கண்டுள்ள இந்தியாவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என குடும்பத்தார் மூலம் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய முதலீடு பெற அனுமதி வழங்கப்பட்டது. இதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் ப.சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சிபிஐ காவல் முடிந்ததை அடுத்து அவர் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தனது குடும்பத்தினர் மூலமாக, டிவிட்டர் பக்கத்தில் ப.சிதம்பரம் சில தகவல்களை பதிவிட்டு வருகிறார். இதனிடையே இந்தியாவில் கடந்த காலங்களில் இல்லாத அளவிற்கு பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி அடைந்துள்ளது. இது, அரசின் பல்வேறு துறைகளிலும் எதிரொலிக்கிறது. இதனை சரிசெய்வதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. பொருளாதார மந்தநிலையை எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பாக ப.சிதம்பரத்தில் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில்; பொருளாதார சரிவை கண்டுள்ள இந்தியாவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

ஏற்றுமதி ஆண்டுக்கு 20 சதவீத உயர்வு என்ற அளவில் இல்லாமல் எந்த நாடும் உள்நாட்டு உற்பத்தியில் 8 சதவீத வளர்ச்சியை எட்ட முடியாது. கடந்த ஆகஸ்டு மாதம் இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சி 06.05 சதவீதம் என்ற அளவிலேயே இருந்தது. காஷ்மீர் விவகாரத்துக்கு பிறகு அரசின் கடைசி கவலையாக பொருளாதாரம் இருக்கிறது என்று பிறந்த நாளிலும் கூட நாட்டின் வளர்ச்சி பற்றிதான் சிந்தித்துக்கொண்டு இருக்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : God ,India , Economic Collapse, India, P. Chidambaram, Dwight
× RELATED தேவ ரகசியத்தை உடைக்கலாமா? : ஜோதிட ரகசியங்கள்