திருப்பூர்: வெண்ணெய் இல்லாமல் போலி நெய் தயாரித்த 7 வீடுகளுக்கு சீல் வைக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து சுமார் 500 லிட்டர் போலி நெய் பறிமுதல் செய்யப்பட்டது. ஆர்.வி.இ லேஅவுட் பகுதியில் டால்டா, பாமாயில் கலந்து போலி நெய் தயாரித்த வீடுகளுக்கு சீல் வைக்கப்பட்டது. உணவு பாதுக்காப்பு நியமன அலுவலர் விஜயலலித்தாம்பிகை நடவடிக்கை மேற்கொண்டார்.