திருப்பூர்: அரசு கேபிளில் இதுவரை 25 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 15 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திருப்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். குறைந்த கட்டணத்தில் கேபிள் இணைப்பு வழங்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார்.