சிவகங்கை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி காரைக்குடியில் பேட்டியளித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் அளித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். தலைக்கவசம் தொடர்பான அபராதத்தை குறைப்பது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.