×

திண்டுக்கல் அருகே வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் மிரட்டிய எஸ்.ஐ-யை கண்டித்து 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்

திண்டுக்கல்: நத்தம் அருகே செந்துறையில் காவல் உதவி ஆய்வாளர் மாதவராஜை கண்டித்து 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறையில் வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் எஸ்.ஐ மிரட்டியதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். வாகன சோதனையின்  போது ஏற்பட்ட தகராறு தொடர்பாக நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து குமரன் என்பவரை மாதவராஜ் கைது செய்துள்ளார். நள்ளிரவில் வீடுபுகுந்து இளைஞரை அடித்து இழுத்துச் சென்ற நத்தம் உதவி ஆய்வாளர் மாதவராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.


Tags : Dindigul , Dindigul, gunpoint, SI-, condemnation, over 500, road rage
× RELATED திண்டுக்கல்லில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்