சென்னை : குற்றப்பின்னணி உடையவர்களுக்கு ஆசிரியர்கள் ஜாமின் வழங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் குற்றப்பின்னணி உடையவர்களுக்கு அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பிணை தருவது வன்மையான கண்டனத்திற்குரியது எனறு தெரிவித்துள்ளது. அரசுப்பணியாளருக்கான மாண்புகளை ஆசிரியர்கள் மீறாமல் செயல்பட வேண்டும் என ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.