×

எல்லையை பார்வையிட்டார் ராணுவ தளபதி

ஜம்மு: ஜம்முவில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள ராணுவ நிலைகளை தளபதி ரன்பீர் சிங் நேற்று பார்வையிட்டார். அப்போது, எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்கவும், எதிர்தாக்குதல் தொடுக்கவும் வீரர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டுமென்று அவர் அறிவுறுத்தினார். ஜம்முவில் உள்ள ரஜோரி, சுந்தர்பானி பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள், தயார்நிலை ஆகியவை குறித்து எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள ராணுவ நிலைகளை அவர் பார்வையிட்டார். அவருடன் லெப்டினன்ட் ஜெனரல் பரம்ஜித் சிங் சங்கா உடன் இருந்தார். எல்லை நடவடிக்கைகள் பற்றி அவருக்கு அங்குள்ள அதிகாரிகள் விளக்கினர்.

Tags : Commander ,border ,Army , Border, sight, army commander
× RELATED இந்திய விமான படையின் முன்னாள் தலைமை...