×

சிலையை சேதப்படுத்துவதன் மூலம் மகாத்மா காந்தி, அம்பேத்கரின் புகழுக்கு தீங்கிழைக்க முடியாது: சமூக விரோதிகளுக்கு பிரியங்கா கண்டனம்

புதுடெல்லி: காந்தி, அம்பேத்கர் சிலைகளை சேதப்படுத்தியவர்களுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம், உத்தர் ஜலான் மாவட்டத்தில் இருந்த மகாத்மா காந்தியின் சிலையை மர்ம நபர்கள் சிலர் நேற்று முன்தினம் சேதப்படுத்தினர். இதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இந்தியில் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் டாக்டர் அம்பேத்கரின் சிலையை சமூக விரோதிகள் சேதப்படுத்தினர். தற்போது, ஜலான் பகுதியில் உள்ள கல்லூரியில் இருந்த தேசப்பிதாவின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. சிலைகளை சேதப்படுத்திய கோழைகளே... உங்கள் வாழ்வின் ஒரே நோக்கம் தேசத் தலைவர்களை அவமானப்படுத்துவது தானா?. அவர்களின் சிலைகளை சேதப்படுத்துவதன் மூலம் அவர்களின் புகழுக்கு நீங்கள் ஒருபோதும் தீங்கிழைக்க முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Mahatma Gandhi ,Ambedkar ,Priyanka , Statue damage, Mahatma Gandhi, Ambedkar, antagonist, Priyanka
× RELATED திருமயம், ஆலங்குடியில் 20 அரசு...