×

தேசிய இந்தி தினத்துக்கு எதிர்ப்பு பெங்களூருவில் கருப்பு தினம்: கண்டன ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடந்தது

பெங்களூரு: தேசிய இந்தி தினம் கொண்டாடப்படுவதை கண்டித்து பெங்களூருவில் டவுன் ஹாலில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கன்னட அமைப்பினர், சமூக ஆர்வலர்கள், அனைத்திந்திய தமிழ் சங்க பேரவை, பெரியார் பேரவை, திராவிட கழகம் உள்பட 50க்கும் மேற்பட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது இந்தி திணிப்பை கண்டித்து முழக்கம் எழுப்பி எதிர்ப்பை தெரிவித்தனர். மத்திய அரசு இந்தி திணிப்பு மூலம் மீண்டும் தென்மாநில மக்களின் உணர்வை சீண்டி பார்க்க முயல்கிறது என கூறினர். மேலும், அதிக வரி செலுத்தும் தென் மாநிலத்தினரின் மொழியை புறக்கணித்து எங்கள் வரிப்பணத்தில் இந்தி தினம் கொண்டாடப்படுகிறது என்று குற்றம்சாட்டினர்.

Tags : Bengaluru , National Hindi Day, Protest, Bengaluru, Black Day, Protest, Rally
× RELATED பாலங்கள் சீரமைப்பு பணி காரணமாக மைசூரு...