×

புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு

திருவனந்தபுரம்: புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது. ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 9ம் தேதி  திறக்கப்பட்டது. 13ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடந்தன. ஓணம் பண்டிகையான 11ம் தேதி சபரிமலையில் தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் தேவசம் போர்டு சார்பில் ஓண விருந்தும் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஓணம் சிறப்பு பூஜைகள்  நிறைவடைந்து இரவு 10 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டது.

இந்த நிலையில் புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மாலை மீண்டும் திறக்கப்படுகிறது. அடுத்த நாள் 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். இந்த நாட்களில் தினமும் கணபதி ஹோமம், உஷபூஜை போன்ற வழக்கமான பூஜைகளுடன் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை போன்ற சிறப்பு பூஜைகளும் நடைபெறும். இந்த 5 நாட்களிலும் அதிகாலை 5.30 மணி முதல் காலை 10.30 மணி வரை நெய்யபிஷேகமும் நடைபெறும். வரும் 21ம் தேதி  இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படுகிறது. அன்றுடன் புரட்டாசி மாத பூஜைகள் நிறைவடையும்

Tags : Opening ,Sabarimala Temple , Pattasi Month Pooja, Sabarimala Temple, Walk, Tomorrow, Opening
× RELATED திருச்செந்தூரில் தண்ணீர் பந்தல் திறப்பு