×

தாய் இறந்த துக்கத்தால் மாரடைப்பில் மகன் சாவு

சென்னை: சாலிகிராமம் தசரதபுரம் ஸ்ரீராமுலு தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (52). ஆட்டோ டிரைவரான இவர், தனது தாய் தேவிகா (82), மனைவி மற்றும் இரண்டு மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 4.30 மணியளவில் இவரது தாய் தேவிகா உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட பாஸ்கர், காலை 7.30 மணியளவில் மாரடைப்பால் இறந்துள்ளார். தாய் இறந்த துக்கம் தாங்க முடியாமல் மகனும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து தாய் மற்றும் மகன் சடலத்தை சாலிகிராமத்தில் உள்ள இடுகாட்டில் ஒரே குழியில் உறவினர்கள் புதைத்துள்ளனர்.

Tags : Mother's grief, heart attack, son, death
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...