×

புன்னையடி சாலை புத்துயிர் பெறுமா?

தென்தாமரைகுளம்: தென்தாமரைகுளம் அருகே காட்டு விளையிலிருந்து அகஸ்தீஸ்வரம் செல்லும் பிரதான சாலை ஒன்று உள்ளது. காலை மற்றும் மாலை வேளைகளில் மட்டுமல்லாது இரவு நேரங்களிலும் இந்த சாலை மிகவும் சுறுசுறுப்பாக  காணப்படும் சாலையாகும். இந்த சாலை பழுதுபட்டு வெகுநாட்கள் ஆகியும் எந்த ஒரு பராமரிப்பும் இன்றி அப்படியே போடப்பட்டுள்ளது. சாலையை ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் பயன்படுத்துகின்றனர். குறுகிய நேரத்தில் கன்னியாகுமரி செல்ல பல்வேறு கிராம மக்கள் இந்த சாலையை பயன்படுத்துவதால் எப்பொழுதும் இருசக்கர,  நான்கு சக்கர வாகனங்கள் எப்போதும்  வந்து கொண்டே இருக்கும். இது தவிர பல தனியார் பள்ளிகளின் வேன்களும் இந்த பகுதி வழியாக வருகின்றன.

சாலையானது மிகவும் குறுகியதாக காணப்படுவதால் எதிரில் வரும் பள்ளி மாணவ மாணவிகள் சைக்கிள்களில் வரும்போது இந்த பள்ளங்கள் அவர்களுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்க கூடியதாக காணப்படுகின்றன. அதன் அருகாமையில் ஒரு புறத்தில் சிறிய கால்வாய் ஒன்று ஓடுவதால் சிலநேரங்களில் தடுமாறி தண்ணீருக்குள் விழும் ஆபத்தும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை  போர்க்கால அடிப்படையில் விரைந்து சாலையை செப்பனிட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் மட்டுமல்லாது  இந்த வழியாக செல்லும் அனைத்து மக்களும், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், ஆசிரியர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road , Thenmaramaikulam, Punnayadi Road
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...