சென்னை: சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தை தூர்வாரி தூண்டில் வளைவு அமைக்க வரும் 23-ம் தேதி மத்திய அரசு ஆய்வு நடத்துகிறது. பழவேற்காடு ஏரியில் சுமார் ரூ.27 கோடியில் தூண்டில் வளைவு அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று வரும் 23 ம் தேதி பழவேற்காடு முகத்துவாரத்தில் மத்திய சுற்றுச்சுழல் துறை ஆய்வு நடத்துகிறது.