×

திருத்துறைப்பூண்டி-முத்துப்பேட்டை சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி நகராட்சியில் மழைநீர் வடிகால் வசதிஏற்படுத்தப்படாததால் நகரிலுள்ள அனைத்து சாலைகளிலும் சிறிது மழை பெய்தாலே மழைநீர் தேங்கிநின்றுவிடுகிறது.இதனுடன் நகரிலுள்ள கழிவு நீரும் சேர்ந்து கொள்கிறது.இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் வேகமாக செல்வதால் அந்தமழை நீரும் கழிவு நீரும் சேர்ந்த தண்ணீர் பொதுமக்கள் மீது தினந்தோறும் படுவது வாடிக்கையாக உள்ளது.மழைநீரும் சாக்கடை நீரும் சேர்ந்து கொண்டு சாலைகளிலுள்ள நீரில் கொசுக்கள் உற்பத்திகூடமாகதிகழ்கிறது. சாலைகளில் மழை நீர் தேங்குவது குறித்து பலமுறை செய்திகள் வெளியிட்டும், முன்னேற்பாடு நடவடிக்கை எடுக்கவலியுறுத்தியும் நிர்வாகம் எந்தவிதநடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

சிறிது மழை பெய்தாலே சாலைகளில் குட்டை உருவாகிதண்ணீர் தேங்கிநிற்கிறது. இதனை சீர் செய்ய செய்யஎந்தநிர்வாகமும், எந்தவிதநடவடிக்கையும் நிரந்தரமாகஎடுப்பதில்லை. தற்காலிகமாக யாராவது நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தால் மட்டுமே தற்காலிகமாக சரிசெய்யப்படும்.இந்த தொடர் நிகழ்வு அனைத்து துறை அதிகாரிகளும் தினந்தோறும் இதை பார்த்துவிட்டு இதனை கடந்துதான் செல்கிறார்கள்.திருத்துறைப்பூண்டி நகரிலுள்ள அனைத்து சாலைகளையும் சரி செய்து, மழைநீர் வடிகால் அமைத்து, அனைத்து தெருக்களுக்கும் சாக்கடைவசதி செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகளின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Motorists , Muthupettai, Muthupettai, motorists
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...